Latest

Post Top Ad

Your Ad Spot

Wednesday, August 31, 2022

கைவிடப்பட்ட நான்

 


தாய் தந்தையரின் அரவணைப்பில் இருந்தேன்

என் அறியாப் பருவத்தில் துரதிஷ்டவசமாக உலகத்தை விட்டு பிரிந்தனர்


உறவுகள் சிலரை பெற்றேன்

என் மீது இருக்கும் பற்றைவிட என் சொத்தில் தான் அதிகம் பற்று வைத்தனர்


நட்புகள் அமைந்து விட்டனர் என பூரித்துப் போனேன்

அவர்களின் சுயதேவைகளுக்காகவும் பணத்தேவைகளுக்காகவும் தான் என்னுடன் பழகினர் 


காதலி மூலமாக சரி நேசம் கிட்டும் என நம்பினேன்

அவளோ வசதியானவனோடு வாக்கப்பட்டு சென்று விட்டாள்


வாழ்க்கையில் ஓர் நாள் இறைவன் மூலமாகவாவது தூய நேசம் பெற்று விடுவேன் என தைரியம் கொண்டேன்

ஆனால் இறுதியாக புலம்பிக்கொண்டிருக்கிறேன் இறைவனும் கைவிட்டு விட்டானோ என்னவோ...


Maestro Shafni

From Puttalam

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages